இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிகர் திலீபுடன் இணைந்து படங்களில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். திலீப், நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்து கொண்டார். திலீப்புடன் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்திலிருந்து மஞ்சு வாரியருடன் நட்பாக பழகி வந்தவர் இயக்குனர் நாதிர்ஷா. மலையாளத்தில் 'அமர் அக்பர் ஆண்டனி, கேசு இ வீடிண்டே நாதன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து திலீப்புடன் நட்பில் இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவரது மகள் திருமணம் நடைபெற்ற சமயத்தில் அதற்காக மஞ்சு வாரியரை சந்தித்து அழைப்பு விடுக்க முயற்சித்து நேரம் கேட்டதாகவும் ஆனால் மஞ்சு வாரியர் தான் பிஸியாக இருப்பதாக முதலில் கூறிவிட்டு பின்னர் நாதிர்ஷாவின் தொலைபேசி அழைப்புகளை எடுக்க மறுத்துவிட்டார் என்றும் அவரே சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டார் என ஒரு பதிவு சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது.
மேலும் அதில் மஞ்சுவாரியார் பழையதை எல்லாம் மறந்து விட்டார் என்று நாதிர்ஷா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். ''அப்படி எந்த ஒரு தகவல் தொடர்பு எனக்கும் மஞ்சுவாரியருக்கும் நடக்கவில்லை, சோஷியல் மீடியாவில் அதுபோல நான் பதிவும் வெளியிடவில்லை. அது போலியானது.. இது வேண்டுமென்றே யாரோ இட்டுக்கட்டி உருவாக்கிய செய்தி'' என்று கூறியுள்ளார்.