மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
மலையாளத் திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்றான கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஜுன் 1ம் தேதி முதல் மலையாளத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம், கேளிக்கை வரி ஆகியவற்றை முன்னிறுத்தி அந்த ஸ்டிரைக் நடைபெற உள்ளது.
அந்த ஸ்டிரைக்குக்கு ஆதரவில்லை என 'அம்மா' என்றழைக்கப்படும் மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திங்களன்று கொச்சியில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ், பிஜு மேனன், பாசில் ஜோசப் உள்ளிட்ட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
“மலையாளத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் நடத்தும் இந்த ஸ்டிரைக்குக்கு 'அம்மா' ஆதரவு தராது,” என அறிவித்துள்ளனர். சங்கத்தின் 'அட்-ஹாக்' கமிட்டி அதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கெனவே மலையாளத் திரையுலகம் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சில தனி நபர்கள் நடத்த முயற்சிக்கும் இந்த ஸ்டிரைக் தேவையில்லாதது, பல சினிமா ஊழியர்களையும் இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.