டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிகர் திலீபுடன் இணைந்து படங்களில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். திலீப், நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்து கொண்டார். திலீப்புடன் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்திலிருந்து மஞ்சு வாரியருடன் நட்பாக பழகி வந்தவர் இயக்குனர் நாதிர்ஷா. மலையாளத்தில் 'அமர் அக்பர் ஆண்டனி, கேசு இ வீடிண்டே நாதன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து திலீப்புடன் நட்பில் இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவரது மகள் திருமணம் நடைபெற்ற சமயத்தில் அதற்காக மஞ்சு வாரியரை சந்தித்து அழைப்பு விடுக்க முயற்சித்து நேரம் கேட்டதாகவும் ஆனால் மஞ்சு வாரியர் தான் பிஸியாக இருப்பதாக முதலில் கூறிவிட்டு பின்னர் நாதிர்ஷாவின் தொலைபேசி அழைப்புகளை எடுக்க மறுத்துவிட்டார் என்றும் அவரே சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டார் என ஒரு பதிவு சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியானது.
மேலும் அதில் மஞ்சுவாரியார் பழையதை எல்லாம் மறந்து விட்டார் என்று நாதிர்ஷா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். ''அப்படி எந்த ஒரு தகவல் தொடர்பு எனக்கும் மஞ்சுவாரியருக்கும் நடக்கவில்லை, சோஷியல் மீடியாவில் அதுபோல நான் பதிவும் வெளியிடவில்லை. அது போலியானது.. இது வேண்டுமென்றே யாரோ இட்டுக்கட்டி உருவாக்கிய செய்தி'' என்று கூறியுள்ளார்.




