இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள நடிகை பார்வதி ஒரு பக்கம் சினிமாவில் நடிப்புக்கு தீனி போடும் கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தான் சார்ந்து இருக்கும் மலையாள சினிமாவில் பெண்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக தாங்கள் ஆரம்பித்த சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) மூலமாக தொடர்ந்து சினிமாவில் பெண்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசி சில விஷயங்களில் தீர்வும் கண்டு வருகிறார்.
இந்த சினிமா பெண்கள் நல அமைப்பு துவங்கப்பட்டதே கடந்த 2017ல் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தான். அந்த சமயத்தில் பார்வதியுடன் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், மஞ்சு வாரியர், விது வின்சென்ட் ஆகியோர் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால் இதில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் போன்ற ஒரு சிலர் நாளடைவில் இந்த சினிமா பெண்கள் நல அமைப்பிலிருந்து விலகினார்கள்.
சமீபத்திய ஒரு பேட்டியில் பார்வதியிடம் மஞ்சு வாரியர், விது சந்திரா போன்றவர்கள் இந்த அமைப்பில் இருந்து விலகியது எதனால் என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. இதனால் கோபமான பார்வதி, “ஏன் விலகினார்கள் என்று நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும்.. சம்பந்தமே இல்லாத என்னிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்பதே தவறு. ஏன் உங்களுக்கு அவர்களிடம் பேட்டி எடுக்க முடியாதா என்ன? அதை விட்டுவிட்டு யார் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் வந்து இப்படி நீங்கள் செய்வது எங்களை ரொம்பவே மரியாதை குறைவாக நடத்துவது போல இருக்கிறது” என்று பொங்கி தள்ளிவிட்டார்.