தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
மலையாள நடிகை பார்வதி ஒரு பக்கம் சினிமாவில் நடிப்புக்கு தீனி போடும் கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தான் சார்ந்து இருக்கும் மலையாள சினிமாவில் பெண்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக தாங்கள் ஆரம்பித்த சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) மூலமாக தொடர்ந்து சினிமாவில் பெண்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசி சில விஷயங்களில் தீர்வும் கண்டு வருகிறார்.
இந்த சினிமா பெண்கள் நல அமைப்பு துவங்கப்பட்டதே கடந்த 2017ல் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து தான். அந்த சமயத்தில் பார்வதியுடன் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், மஞ்சு வாரியர், விது வின்சென்ட் ஆகியோர் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால் இதில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் போன்ற ஒரு சிலர் நாளடைவில் இந்த சினிமா பெண்கள் நல அமைப்பிலிருந்து விலகினார்கள்.
சமீபத்திய ஒரு பேட்டியில் பார்வதியிடம் மஞ்சு வாரியர், விது சந்திரா போன்றவர்கள் இந்த அமைப்பில் இருந்து விலகியது எதனால் என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. இதனால் கோபமான பார்வதி, “ஏன் விலகினார்கள் என்று நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும்.. சம்பந்தமே இல்லாத என்னிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்பதே தவறு. ஏன் உங்களுக்கு அவர்களிடம் பேட்டி எடுக்க முடியாதா என்ன? அதை விட்டுவிட்டு யார் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் வந்து இப்படி நீங்கள் செய்வது எங்களை ரொம்பவே மரியாதை குறைவாக நடத்துவது போல இருக்கிறது” என்று பொங்கி தள்ளிவிட்டார்.