விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தென்னிந்திய அளவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் மகள். சுரேஷ் குமார் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே மலையாள திரையுலகம் நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது சம்பள உயர்வால் தள்ளாடி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருபவர். வரும் மே மாதம் முதல் மலையாள திரை உலகில் புதிய படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு செய்தார்.
அது மட்டுமல்ல நடிகர்கள் அதிக ஊதியம் கேட்பதாலும் தங்களது படங்களை தாங்களே 100 கோடி வசூல் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதாலும் தயாரிப்பாளர்களுக்கு தான் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, நடிகர்களே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படம் தயாரிப்பது ஆபத்தான போக்கு என்றும் கூறியிருந்தார். பொதுவாகவே அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளை இழுத்து சர்ச்சைகளில் சிக்கும் ஜெயிலர் பட வில்லனான விநாயகன் சுரேஷ்குமாரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா என்பது உங்களுடைய குடும்ப சொத்தா என்ன? நீங்கள் இதை உங்கள் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்லி படங்களில் நடிக்க வேண்டாம் என சொல்லுங்கள். நான் ஒரு நடிகன்.. நான் விரும்பினால் என்னால் படம் தயாரிக்க, இயக்க, விநியோகம் செய்ய, படங்களை திரையிடவும் முடியும். இது இந்தியா. ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.