தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்தவர் வீஜே விஷால். இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிகராக களமிறங்கிய அவர், கல்யாணமாம் கல்யாணம், அரண்மனை கிளி, பாக்கியலெட்சுமி ஆகிய தொடர்களில் நடித்தார். திடீரென சீரியலை விட்டு விலகி பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்து இறுதிவரை விளையாடி 3ம் இடத்தை பெற்றார்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பலர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரை நேயர்களின் பெரும் ஆதரவை பெற்ற வீஜே விஷால் இனி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என கேள்விகள் எழும்பியது. இந்நிலையில், வீஜே விஷால் பிரபல இயக்குநரான ரவிக்குமாரை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துள்ளார். இயக்குநர் ரவிக்குமார் விஷ்னு விஷால் நடித்த 'இன்று நேற்று நாளை' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வீஜே விஷால் அவரை சந்தித்திருப்பது அவர் சினிமாவில் அறிமுகமாகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழச் செய்துள்ளது.