எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்தவர் வீஜே விஷால். இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிகராக களமிறங்கிய அவர், கல்யாணமாம் கல்யாணம், அரண்மனை கிளி, பாக்கியலெட்சுமி ஆகிய தொடர்களில் நடித்தார். திடீரென சீரியலை விட்டு விலகி பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்து இறுதிவரை விளையாடி 3ம் இடத்தை பெற்றார்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பலர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரை நேயர்களின் பெரும் ஆதரவை பெற்ற வீஜே விஷால் இனி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என கேள்விகள் எழும்பியது. இந்நிலையில், வீஜே விஷால் பிரபல இயக்குநரான ரவிக்குமாரை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துள்ளார். இயக்குநர் ரவிக்குமார் விஷ்னு விஷால் நடித்த 'இன்று நேற்று நாளை' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வீஜே விஷால் அவரை சந்தித்திருப்பது அவர் சினிமாவில் அறிமுகமாகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழச் செய்துள்ளது.