கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்தவர் வீஜே விஷால். இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிகராக களமிறங்கிய அவர், கல்யாணமாம் கல்யாணம், அரண்மனை கிளி, பாக்கியலெட்சுமி ஆகிய தொடர்களில் நடித்தார். திடீரென சீரியலை விட்டு விலகி பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்து இறுதிவரை விளையாடி 3ம் இடத்தை பெற்றார்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பலர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரை நேயர்களின் பெரும் ஆதரவை பெற்ற வீஜே விஷால் இனி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என கேள்விகள் எழும்பியது. இந்நிலையில், வீஜே விஷால் பிரபல இயக்குநரான ரவிக்குமாரை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துள்ளார். இயக்குநர் ரவிக்குமார் விஷ்னு விஷால் நடித்த 'இன்று நேற்று நாளை' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வீஜே விஷால் அவரை சந்தித்திருப்பது அவர் சினிமாவில் அறிமுகமாகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழச் செய்துள்ளது.