பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2023ம் ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் '2018' . கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இப்படம் மலையாளம் கடந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 2023ம் ஆண்டிற்கான அதிகமான வசூலித்த படமாக இருந்தது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்து தமிழில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இது அல்லாமல் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றைக் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது சிம்புவை வைத்து இயக்கவிருந்த படம் கை மாறியுள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.