ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் |

நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பிறகு கடந்த சில மாதங்களாகவே அது குறித்த செய்திகளில் தான் பரபரப்பாக அடிபட்டு வந்தார். அதேசமயம் இன்னொரு பக்கம் அவர் நடித்து வந்த தண்டேல் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீசுக்கு தயாராகி வந்தது. இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கடல் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டும் ஆந்திர மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாயகன் நாகசைதன்யா உள்ளிட்டவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது மையப்படுத்தி தான் இந்த கதை உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நடைபெற்றபோது அங்கே ரோந்து வந்த கேரள கப்பற்படை அதிகாரிகள் தண்டேல் படக்குழுவினரை கைது செய்து அழைத்துச் சென்றனராம். அதன் பிறகு அவர்களை விசாரித்து விடுவித்துள்ளனர். இந்த தகவலை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.