டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் |

நாகசைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்த படம் ‛தண்டேல்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கில் நிகில் சித்தார்த்தாவை வைத்து ‛கார்த்திகேயா-2' படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் சந்து மொண்டேட்டி.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவை சந்தித்து தனது அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்ட சூர்யா, இன்னும் அந்த படத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லையாம். அப்படி அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்தால் முதலில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி விட்டு அதன்பிறகுதான் கார்த்திகேயா- 2 படத்தை இயக்குவாராம் சந்து மொண்டேட்டி. மேலும் தற்போது சூர்யா, ‛ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.