இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நாகசைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்த படம் ‛தண்டேல்'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கில் நிகில் சித்தார்த்தாவை வைத்து ‛கார்த்திகேயா-2' படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் சந்து மொண்டேட்டி.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவை சந்தித்து தனது அடுத்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அவர் சொன்ன கதையை கேட்ட சூர்யா, இன்னும் அந்த படத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லையாம். அப்படி அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்தால் முதலில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி விட்டு அதன்பிறகுதான் கார்த்திகேயா- 2 படத்தை இயக்குவாராம் சந்து மொண்டேட்டி. மேலும் தற்போது சூர்யா, ‛ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.