டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

மதுவின் தீமையை விளக்கி சமீபத்தில் 'பாட்டல் ராதா' என்ற படம் வெளிவந்தது. அதற்கு முன்பு 'அப்பா வேணாம்பா', 'கிளாஸ்மெட்', 'மதுபானகடை' உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தன. ஆனால் மதுவின் தீமையை விளக்கி முழுநீள படமாக வெளிவந்த முதல் படம் 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்'. இந்த படத்தை கடலூர் புருஷோத்தமன் இயக்கினார். தேங்காய் சீனிவாசன் நாயகனாகவும், கே.ஆர்.விஜயா நயாகியாகவும் நடித்தார்கள். ராஜவர்த்தினி பிக்சர்ஸ் தயாரித்தது.
இந்த படத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய எம்ஜிஆர். “மது அரக்கனை ஒழிக்க இதுபோன்ற திரைப்படங்கள் அவசியம். இந்த நல்ல முயற்சிக்காகவே இந்த படத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இந்த படம் மாநில விருதை மட்டுல்ல மத்திய அரசின் விருதையும் பெற வேண்டும்” என்றார்.
படம் வெளியாகி சுமாரன வரவேற்பைத்தான் பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசு விருதை பெற்றது.