கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது | தனுஷ் படம் குறித்த கமெண்ட் சும்மா ஒரு தமாஷுக்காக சொன்னது ; கவுதம் மேனன் | 'எம்புரான்' படத்துக்காக 'தொடரும்' பட ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால் | இரண்டாம் பாகம் இருக்கு ; ஆவேசம் நடிகர் சொன்ன அப்டேட் | ''எனக்கு மேனேஜரே இல்லை'': சந்தீப் வங்காவுக்கு சாய் பல்லவி பதில் | மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க கவுதம் மேனன் முடிவு ; மோகன்லால், பிரித்விராஜூடன் பேச்சு | சினிமா ஹீரோயின் ஆனார் ஆயிஷா | அதிகாலை காட்சிகள் இல்லாமல் வெளியாகும் 'தண்டேல்' | பிளாஷ்பேக்: மதுவின் தீமையை விளக்கிய முதல் படத்தை துவக்கி வைத்த எம்ஜிஆர் |
மதுவின் தீமையை விளக்கி சமீபத்தில் 'பாட்டல் ராதா' என்ற படம் வெளிவந்தது. அதற்கு முன்பு 'அப்பா வேணாம்பா', 'கிளாஸ்மெட்', 'மதுபானகடை' உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தன. ஆனால் மதுவின் தீமையை விளக்கி முழுநீள படமாக வெளிவந்த முதல் படம் 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்'. இந்த படத்தை கடலூர் புருஷோத்தமன் இயக்கினார். தேங்காய் சீனிவாசன் நாயகனாகவும், கே.ஆர்.விஜயா நயாகியாகவும் நடித்தார்கள். ராஜவர்த்தினி பிக்சர்ஸ் தயாரித்தது.
இந்த படத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய எம்ஜிஆர். “மது அரக்கனை ஒழிக்க இதுபோன்ற திரைப்படங்கள் அவசியம். இந்த நல்ல முயற்சிக்காகவே இந்த படத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இந்த படம் மாநில விருதை மட்டுல்ல மத்திய அரசின் விருதையும் பெற வேண்டும்” என்றார்.
படம் வெளியாகி சுமாரன வரவேற்பைத்தான் பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசு விருதை பெற்றது.