பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
1944ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான படம் 'பத்ருஹரி'. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'பத்ருஹரி' என்ற மன்னரின் கதை. நேர்மையாக ஆட்சி செய்த இந்த மன்னன் சமஸ்கிருதத்தில் ஏராளமான பாடல்களை இயற்றியவர். அதே நேரத்தில் பெண்பித்தராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு 300 மனைவிகள் இருந்தார்கள். அதில் கடைசி மனைவிதான் படத்தின் ஹீரோயின் ஜெயம்மா. மன்னராக செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். அவரது சகோதரர் விக்ரமாதித்தனாக ஜி.பட்டு அய்யர் நடித்திருந்தார். அவரது மூத்த மருமகன் அஸ்வத்தாமனாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்திருந்தார்.
இவர்கள் தவிர வி.என்.ஜானகி, டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், நாகலட்சுமி, கல்யாணி, 'ஆழ்வார்' குப்புசாமி, 'புலிமூட்டை' ராமசாமி, இ.கிருஷ்ணமூர்த்திபா குஞ்சிதா மற்றும் எம்.கிருஷ்ணமூர்த்தி குஞ்சிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில்தான் முதன் முறையாக ஆண் நடிகர்களும், பெண் நடிகைகளும் மிகவும் நெருக்கமாக தொட்டு பேசி, கட்டிப்பிடித்து நடித்திருந்தார்கள். அதோடு படத்தின் நாயகியாக நடித்த ஜெயம்மா கன்னடத்தில் முன்னணி நடிகை அவர் நல்ல கேரக்டர்களிலேயே நடித்தார். ஆனால் இந்த படத்தில் மன்னரை மயக்கும் விலைமாதுவாக நடித்தார். காமெடி நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் இதில் வில்லன். மன்னருக்காக மக்களிடம் கொள்ளை அடிப்பவராக நடித்தார். அதோடு மன்னரின் மனைவி ஜெயம்மாவுடம் கள்ள தொடர்பு வைத்திருப்பவராகவும் நடித்தார்.
நெருக்கமான காட்சிகள், ஜெயம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த கேரக்டர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதுவே படத்தை வெற்றி பெறவும் வைத்தது.