ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேற்று ஸ்ருதிஹாசன் தன்னுடைய 39வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. அதனால், அங்கு படப்பிடிப்பு குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்ருதி தனது நண்பர்களுக்காக பார்ட்டியும் வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“2025ம் ஆண்டு ஒரு மாயாஜால ஆண்டு. ஜனவரி மாதக் குழந்தையாக நான் என் ஆண்டை கொண்டாட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்குகிறேன். அதை நான் ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும் என்னைச் சூழ்ந்துள்ள அனைத்து அழகான மக்களுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.
இந்த ஆண்டு இதுவரை இல்லாத இனிமையான மனிதர்களைக் கொண்ட அற்புதமான 'கூலி' குழுவுடன் கொண்டாடுவது கூடுதல் சிறப்பு. இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு பிறந்தநாள் விழாவை நடத்தியது, பல அழகான உள்ளங்களுடன் கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் என்னுடன் பயணிக்கும் மற்றும் அனைத்து வேலை நாட்களிலும் சிறந்த ஆதரவாக இருக்கும் எனது நம்ப முடியாத குழுவிற்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.