இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
தெலுங்கில் 'கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2' ஆகிய படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது இயக்கியுள்ள படம் 'தண்டேல்'. இப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் தயாரான இப்படம் அடுத்த வாரம் பிப்ரவரி 7ம் தேதி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் இயக்குனரான சந்து மொன்டேட்டி அடுத்து சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'தண்டேல்' படத்தின் கதையைத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் சொன்ன போது சூர்யா, அல்லது ராம் சரண் நாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்க வாய்ப்பு தருவதாகச் சொன்னார். அப்படத்திற்காக அவர் 300 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார். தன் மீது அவ்வளவு நம்பிக்கையை அல்லு அரவிந்த் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள 'ரெட்ரோ' படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.