சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் சமந்தா. இதற்கு அவரின் உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஏற்பட்ட தசை அழற்சி பிரச்னையால் சில காலம் சிகிச்சையில் இருந்தார். இருப்பினும் கதையின் நாயகியாக யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களிலும், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸிலும் நடித்தார். தற்போது படம் மற்றும் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா கூறியதாவது, "தொடர்ந்து படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் நான் எனது ஒவ்வொரு படத்தையும் கடைசி படம் போல் நடிக்க விரும்புகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஒரு படத்தை தேர்ந்தெடுத்துக்கும் போது பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.