100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தோல்வியில் முடிந்தது. இப்படத்திற்கான பல நெகட்டிவ் பரப்புரைகள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் வெளியாக உள்ள 'மத கஜ ராஜா' படத்திற்கான நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஞ்சலியிடம் 'கேம் சேஞ்ஜர்' படத்தின் தோல்வி குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஞ்சலி, “கேம் சேஞ்ஜர்' படம் பற்றி பேச வேண்டுமென்றால் அதற்காக தனியாக பேட்டி ஒன்றை நடத்த வேண்டும். எல்லாருக்கும் அதற்கான காரணம் தெரியும். சில படங்களுக்கு நடிகர்கள், நடிகைகள் தனியாகச் செய்வார்கள். கேம் சேஞ்ஜர் எனக்கு அந்த மாதிரியான ஒரு படம். பலரும் எனது நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அதுவே எனக்குப் போதுமானது. மற்ற விஷயங்கள் பற்றி பேச வேண்டுமானால் அரை மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ தனியாகப் பேச வேண்டும்,” என்றார்.
'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட்டில் பாதியளவு மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.