கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தோல்வியில் முடிந்தது. இப்படத்திற்கான பல நெகட்டிவ் பரப்புரைகள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் வெளியாக உள்ள 'மத கஜ ராஜா' படத்திற்கான நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஞ்சலியிடம் 'கேம் சேஞ்ஜர்' படத்தின் தோல்வி குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஞ்சலி, “கேம் சேஞ்ஜர்' படம் பற்றி பேச வேண்டுமென்றால் அதற்காக தனியாக பேட்டி ஒன்றை நடத்த வேண்டும். எல்லாருக்கும் அதற்கான காரணம் தெரியும். சில படங்களுக்கு நடிகர்கள், நடிகைகள் தனியாகச் செய்வார்கள். கேம் சேஞ்ஜர் எனக்கு அந்த மாதிரியான ஒரு படம். பலரும் எனது நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அதுவே எனக்குப் போதுமானது. மற்ற விஷயங்கள் பற்றி பேச வேண்டுமானால் அரை மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ தனியாகப் பேச வேண்டும்,” என்றார்.
'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட்டில் பாதியளவு மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.