Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கேம் சேஞ்ஜர்' பற்றி மனம் திறந்த அஞ்சலி

28 ஜன, 2025 - 10:20 IST
எழுத்தின் அளவு:
A-heartfelt-tribute-to-Game-Changer


ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தோல்வியில் முடிந்தது. இப்படத்திற்கான பல நெகட்டிவ் பரப்புரைகள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் வெளியாக உள்ள 'மத கஜ ராஜா' படத்திற்கான நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஞ்சலியிடம் 'கேம் சேஞ்ஜர்' படத்தின் தோல்வி குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஞ்சலி, “கேம் சேஞ்ஜர்' படம் பற்றி பேச வேண்டுமென்றால் அதற்காக தனியாக பேட்டி ஒன்றை நடத்த வேண்டும். எல்லாருக்கும் அதற்கான காரணம் தெரியும். சில படங்களுக்கு நடிகர்கள், நடிகைகள் தனியாகச் செய்வார்கள். கேம் சேஞ்ஜர் எனக்கு அந்த மாதிரியான ஒரு படம். பலரும் எனது நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அதுவே எனக்குப் போதுமானது. மற்ற விஷயங்கள் பற்றி பேச வேண்டுமானால் அரை மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ தனியாகப் பேச வேண்டும்,” என்றார்.

'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட்டில் பாதியளவு மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் : சமந்தாசவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே ... ஓடிடியில் இந்த வாரம் 'புஷ்பா 2' ரிலீஸ் ஓடிடியில் இந்த வாரம் 'புஷ்பா 2' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)