ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! |
பல வருடங்களுக்கு முன்பு குடியின் தீமையை விளக்கி 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' என்று ஒரு படம் வந்தது. இப்போது அதையே தன் வாழ்வில் ஒரு அங்கம் என சொல்லியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கி உள்ள படம் 'பாட்டல் ராதா'. இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் நடித்துள்ளனர். வரும் 24ம் தேதி படம் ரிலீசாகிறது. இதை முன்னிட்டு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் மிஷ்கின் பேசியதாவது : சினிமாவில் அதிகமாக குடித்தவனும் நான்தான், குடித்துக் கொண்டிருப்பவனும் நான்தான், அதிகமாக குடிக்க இருப்பவனும் நான்தான். இதை சொல்ல எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு சாரயமே காய்ச்சத் தெரியும், சினிமாவை விட அந்த டெக்னாலஜியை நான் அதிகம் கற்றிருக்கிறேன்.
மன வருத்தம் அடைந்தவர்கள் மது அருந்துகின்றனர். பிறகு அதற்கு அடிமையாகின்றனர். அவர்களை அவமரியாதை செய்வது தவறு. அவர்கள் ஏன் இப்படி மாறினார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். நான் குடிகாரன் என்றாலும், எப்போதும் குடி என்னை அடிமையாக்கியது இல்லை. எனக்கு வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. குடிபோதையைவிட மிகப்பெரிய போதை சினிமா.
அதைவிட இளையராஜாதான் எனக்கு மிகப்பெரிய போதை. நான் குடிக்கும்போது சைட்டிஷ்ஷாக அவருடைய பாடல்களைத்தான் கேட்பேன். பலபேரை குடிகாரனாக மாற்றியது அவர்தான். குடி இல்லாத நாடே கிடையாது.'பாட்டல் ராதா' படத்தை பார்ப்பவர்கள் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். என்றார்.