தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒருகாலத்தில் மிஷ்கினும், விஷாலும் நண்பர்களாக இருந்தார்கள். துப்பறிவாளன் படத்தில் விஷாலை ஸ்டைலாக நடிக்க வைத்து அழகு பார்த்தார் மிஷ்கின். ஆனால், துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் மிஷ்கின், விஷால் இடையே பிரச்னை ஏற்பட்டது. மிஷ்கின் அதிக செலவு வைத்து விட்டார். சரியாக படப்பிடிப்பு நடத்தவில்லை என்று விஷால் தரப்பு குற்றம் சாட்டியது. விஷால் செய்த தவறுகளால் இவ்வளவு பிரச்னை என்று மிஷ்கின் தரப்பு பொங்கியது.
ஒரு மேடையில் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்தும் பேசினார் மிஷ்கின். பின்னர், துப்பறிவாளன் படத்தை தானே இயக்கப் போகிறேன் என்று விஷால் அறிவித்தார். சில பைனான்ஸ் பிரச்னை காரணமாக அந்த படம் அப்படியே நிற்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் 'விஷால், சாய் தன்ஷிகா திருமணம் குறித்து மிஷ்கின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஷால் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்றாலும், அவருக்காக ஒதுங்கி நின்று பிரார்த்தனை செய்வேன். சாய் தன்ஷிகா தனக்கு தெரிந்தவர் என்று கூறியுள்ளார்.
இதனால் மிஷ்கினை தனது திருமணத்துக்கு விஷால் அழைப்பாரா? இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்து துப்பறிவாளன் 2 படத்தை முடிக்க, சாய்தன்சிகா முயற்சிகள் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.