ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் காதலிக்க நேரமில்லை என்ற படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி , அடுத்தபடியாக டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்தில் தான் நடிக்கப் போவதாக தெரிவித்தார். அவர் இயக்கிய டாடா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இயக்கத்தில் உருவாகும் என்னுடைய 34வது படம் அரசியல் கதையில் உருவாகிறது. வெகுஜன மக்களை கவரக்கூடிய படமாக அது இருக்கும் என்கிறார் ஜெயம் ரவி.