ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிரபல இயக்குனரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது பரபரப்பானது.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்ட பதிவில், ‛‛தெலுங்கு நடிகர் சங்கத்தில் இக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்டநாட்களுக்கு முன் புகார் அளித்தேன். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கிய அவரை திரைத்துறையினர் ஆதரிக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் மீது பூனம் கூறிய குற்றச்சாட்டு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தெலுங்கு நடிகர் சங்கம் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளது.