32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழில் 'ஜென்டில்மேன்' தொடங்கி '2.ஓ' படம் வரை ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வந்தன. ஆனால் கமல் நடிப்பில் இயக்கிய 'இந்தியன்-2' படம் மட்டுமே அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் தற்போது ராம்சரண் நடிப்பில் தான் இயக்கி உள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை வெற்றி படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார் ஷங்கர்.
'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு பிறகு ராம்சரண் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்தி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய படக்குழு, தற்போது தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜுவும் புரமோஷனில் ஈடுபட்டுள்ளாராம். அதோடு மட்டுமின்றி இயக்குனர் ஷங்கரிடத்திலும் 'கேம் சேஞ்சர்' படத்தை இன்னும் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்து ஊடங்களுக்கும் தொடர்ந்து பேட்டிகள் கொடுக்குமாறும் ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம். அதன் காரணமாகவே ஒரு பக்கம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இயக்குனர் ஷங்கர், ஒவ்வொரு நாளும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதிலும் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறாராம்.