மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
பிரபல கன்னட நடிகரின் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ்குமார் கடந்த 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது வரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி உடன் ‛ஜெயிலர்', தனுஷ் உடன் ‛கேப்டன் மில்லர்' ஆகிய படங்களிலும் நடித்தார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு கடந்த 19ம் தேதி சென்றார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சிவராஜ்குமார். அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்து முடிவடைந்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேஷ் மனோகரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதில், "சிவராஜ்குமாரின் உடல்நிலை குறித்த அறிவிப்பை பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதில் அவருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. சிவராஜ்குமார் தற்போது சீரான நிலையில் நலமுடன் இருக்கிறார், விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் " என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சிவராஜ்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛சிவராஜ்குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவர் நலமாக உள்ளார், குணமடைந்து வருகிறார். ரசிகர்கள், நலம் விரும்பிகளின் ஆதரவுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.