மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இப்படத்தின் 50வது நாள்.
இந்த வருடத்தில் ஒரு சில படங்கள்தான் 50 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் நிறைய லாபத்தைக் கொடுத்துள்ளது. அதனால், தெலுங்கிலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகியவை வெளியாக உள்ளன. 'அமரன்' படத்தின் வெற்றியால் இந்தப் படங்களுக்கான வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.




