Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 நாட்களைத் தொட்ட 'அமரன்'

19 டிச, 2024 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Amaran-reaches-50-days


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இப்படத்தின் 50வது நாள்.

இந்த வருடத்தில் ஒரு சில படங்கள்தான் 50 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் நிறைய லாபத்தைக் கொடுத்துள்ளது. அதனால், தெலுங்கிலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.

அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகியவை வெளியாக உள்ளன. 'அமரன்' படத்தின் வெற்றியால் இந்தப் படங்களுக்கான வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதுத் தாலியுடன் புரமோஷனுக்கு வந்த கீர்த்தி சுரேஷ்புதுத் தாலியுடன் புரமோஷனுக்கு வந்த ... ஸ்டன்ட் கலைஞர் மற்றும் நடிகர் கோதண்டராமன் காலமானார் ஸ்டன்ட் கலைஞர் மற்றும் நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)