வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 'பேபி ஜான்' படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகின. ஆனால், கீர்த்தி சுரேஷுக்குக் கடந்த வாரம் திருமணம் நடந்ததால் அவர் அவற்றில் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் தற்போது புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். சிகப்பு நிற கவுன் ஒன்றில் கிளாமராக வந்து கலந்து கொண்டார். கழுத்தில் எந்தவிதமான நகையும் அணியாமல், புதுத் தாலியை மட்டும் அவர் அணிந்து வந்தார்.
இந்தக் காலத்தில் திருமணம் முடிந்த பின் ஆடைக்குள் புதுத்தாலியை மறைத்துக் கொண்டு வேலைக்குச் செல்பவர்கள்தான் அதிகம். ஆனால், கீர்த்தி அதை எந்தவிதத்திலும் மறைக்காமல் அணிந்து வந்தது நேற்று சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
திருமணத்திற்குப் பின்பும் கீர்த்தி சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.