நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 'பேபி ஜான்' படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகின. ஆனால், கீர்த்தி சுரேஷுக்குக் கடந்த வாரம் திருமணம் நடந்ததால் அவர் அவற்றில் கலந்து கொள்ளவில்லை.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவர் தற்போது புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். சிகப்பு நிற கவுன் ஒன்றில் கிளாமராக வந்து கலந்து கொண்டார். கழுத்தில் எந்தவிதமான நகையும் அணியாமல், புதுத் தாலியை மட்டும் அவர் அணிந்து வந்தார்.
இந்தக் காலத்தில் திருமணம் முடிந்த பின் ஆடைக்குள் புதுத்தாலியை மறைத்துக் கொண்டு வேலைக்குச் செல்பவர்கள்தான் அதிகம். ஆனால், கீர்த்தி அதை எந்தவிதத்திலும் மறைக்காமல் அணிந்து வந்தது நேற்று சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
திருமணத்திற்குப் பின்பும் கீர்த்தி சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




