மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதி | டி.வி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் வேண்டும் : மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு | கொலை செய்பவர்கள் ஹீரோக்களா?: கேரள முதல்வர் கடும் தாக்கு | பிளாஷ்பேக் : அந்த காலத்து அடல்ட் கண்டன்ட் படம் | பிளாஷ்பேக்: முதல் திருவிளையாடல் படம் | சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் திலீப். மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் கமர்சியல் ஆக்ஷன் ரூட்டில் பயணிக்க, நடிகர் திலீப் குடும்ப ரசிகர்களை குறி வைத்து காமெடி, சென்டிமெண்ட் என தனக்கான ஒரு தனி பாதையை போட்டுக் கொண்டவர். மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெயரை பெற்ற இவர் சமீப வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார். அது மட்டுமல்ல, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறைவாசமும் அனுபவித்து விட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வழக்கும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
அந்த வழக்கில் அவர் சிக்கியிருந்த சமயத்தில் தான் அவரது நடிப்பில் உருவான ராம்லீலா திரைப்படம் வெளியாகி நூறு கோடி வசூலித்தது. இதனால் திலீப் மீது ரசிகர்கள் எந்த அதிருப்தியிலும் இல்லை என்பது அப்போது நிரூபதமானது. ஆனாலும் சமீபகாலமாக அவர் கதை தேர்வில் கோட்டை விடுவதால் தான் சரிவை சந்தித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் அவரது படங்கள் வெளியாகும் போது அவர் குறித்த பர்சனல் விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் அவர் மீது வீசப்படுகிறது. சமீபத்தில் கூட சபரிமலையில் அவருக்கென விதிமுறைகளை தளர்த்தி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய நடிகர் திலீப், “என் மீது யார் வேண்டுமானாலும் கல்லெறிந்து கொள்ளட்டும்.. என் புகழுக்கு களங்கம் விளைவித்தாலும் விளைவிக்கட்டும். அது பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. எனக்கு இன்னும் பேசுவதற்கான வாய்ப்பு வரவில்லை.. கடவுள் அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுப்பார் என நிச்சியமாக நம்புகிறேன். எனக்கு எப்போதுமே என் பின்னணியில் இருந்து உற்சாகமும் பாதுகாப்பும் பலமும் கொடுப்பவர்கள் எனது ரசிகர்கள் தான்.. அவர்களால் தான் இன்று நான் இங்கே நிற்கிறேன். நிச்சயம் அவர்கள் விரும்பும் விதமான படங்களை தொடர்ந்து கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.