எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'இருட்டு அறையில் முரட்டு குத்து' தற்போது வெளிவந்துள்ள 'பயர்' மாதிரியான அடல்ட் கண்டன்ட் படம் அந்த காலத்திலும் வெளிவந்துள்ளது. காட்சிகள் ஆபாசமாக இல்லா விட்டாலும் வசனங்களும், படத்தின் கதை, திரைக்கதையும் அடல்ட் கண்டன்ட்டாக இருக்கும்.
அப்படி ஒரு படமாக வெளியாகி பொதுமக்களிடமிருந்தும், சினிமா பார்வையாளர்களிடமிருந்தும் வெறுப்பை சம்பாதித்த படம் 'முத்து எங்கள் சொத்து'. 1983ம் ஆண்டு ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய இந்த படத்தில் பிரபு, ராதா, ராஜீவ், வேணு அரவிந்த், கீதா, கே.ஏ. தங்கவேலு, மனோரமா, அனுராதா, வனிதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.என்.பார்வதி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 1983ம் ஆண்டு வெளியானது.
கதைப்படி பூர்ணம் விசுநாதனுக்கு ராஜீவும், வேணு அரவிந்தும் மகன்கள். இருவருமே ஜாலி பேர்வழிகள். அப்பாவின் சொத்துக்களை சுரண்டி, நடன அழகி அனுராதாவிடம் கொடுத்து அவர் அழகில் மயங்கி கிடப்பவர்கள்.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் பூர்ணம் விஸ்வநான். இருவரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ அந்த குழந்தைக்கே எனது சொத்துக்கள் சொந்தம் என்று கூறிவிடுகிறார். இதனால் இருவரின் மனைவிகளும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள போட்டி போட்டு கணவன்மார்களை 'கட்டில் டார்ச்சர்' செய்வதுதான் திரைக்கதை. இந்த பிரச்சினையை அந்த வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் முத்துவும்(பிரபு) அவர் காதலிக்கும் சமையல்காரி ராதாவும் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பது கதை.
பஞ்சு அருணாசலம் நேரடியாகவே ஆபாச வசனங்களை எழுதி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். நல்ல படங்களை இயக்கி பெயரெடுத்த ரங்கராஜன் இந்த படத்தையும் எடுத்து வாங்கி கட்டிக் கொண்டார். எப்படி இருந்தாலும் படம் 100 நாளை தாண்டி ஓடி விழாவும் கொண்டாடியது.