தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

'புஷ்பா 2' படம் மூலம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் பான் இந்தியா ஹீரோ அந்தஸ்துக்குப் போய்விட்டார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் குறித்து உறுதியான எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா, அல்லது தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், சமீபத்திய அப்டேட் படி அட்லீ இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார் எனச் சொல்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக அப்படம் உருவாக உள்ளதாம். படத்தில் போர்வீரன் ஆக நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். அதற்காக வெளிநாடு சென்று ஒரு மாதம் பயிற்சியும் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் இப்படத்தின் பணிகள் ஆரம்பமாகும் என்றும் 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜான்வி கபூர் படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.




