விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைகள் பலரும் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சுமத்திய போது, அறிக்கை வெளியான சில நாட்களுக்கு நடிகர் சங்கம் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதி காத்தது.
நடிகர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளே இதுபோன்று பாலியல் புகார்களுக்கு ஆளானது அதிர்ச்சி அளித்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவரான மோகன்லால் தனது தலைமையிலான சங்க நிர்வாகிகள் அனைவருடன் சேர்ந்து கூண்டோடு ராஜினாமா செய்தார். புதிய நிர்வாக குழு மீண்டும் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்படும் என்றும், தான் மீண்டும் சங்கத் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை என்றும் கூட அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகரும், அமைச்சருமான சுரேஷ் கோபி இப்படி கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து ஒரு கெட் டுகெதர் பார்ட்டி நடத்த இருக்கிறார். வரும் ஜனவரி-5ஆம் தேதி கொச்சியில் உள்ள இந்தூர் ஸ்டேடியத்தில் இது ஒரு மெகா விழாவாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மோகன்லாலும் மம்முட்டியும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மலையாள திரை உலகில் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் அரசியல் ரீதியாகவும் சங்கத்திற்கு ஆதரவு இருக்கும் என்று தெரியப்படுத்தும் விதமாக சுரேஷ் கோபி இந்த கெட் டு கெதர் நிகழ்வை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.