ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரிஷப் ஷெட்டி நடிப்பு, இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவின் கவனத்தை திருப்பிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 கோடியில் தயாராகி ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இதனை தயாரித்தனர்.
ஏற்கனவே காந்தாரா 2ம் பாகம் 'காந்தாரா சாப்டர் 1' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக மலையாள நடிகரான ஜெயராம் தற்போது இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.