நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழில் 'நேரம், ராஜா ராணி, நய்யாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் மலையாளத்தில் 'பெங்களூர் டேஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவருமான நடிகை நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பின் நடிப்புக்கு சிறிய இடைவெளி விட்டிருந்தார். சமீப காலமாக செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ள 'சூட்சும தர்ஷினி' என்கிற திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக 'மின்னல் முரளி' பட இயக்குனரும் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தருமான பஷில் ஜோசப் நடித்திருந்தார்.
இந்த படத்தை எம் சி என்பவர் இயக்கி இருந்தார். தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இளைஞர் ஒருவரின் மர்மமான செயல்பாடுகளை கண்காணிக்கும் வித்தியாசமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நஸ்ரியா இதில் நடித்திருந்தார். இந்த படம் வித்தியாசமான கதையம்சம் மற்றும் புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் இந்த படத்தின் எதிர்பாராத திருப்பங்களாக அமைந்து படத்தின் வெற்றிக்கும் வித்திட்டன.
தற்போது படம் வெளியாகி 18 நாட்கள் ஆன நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இந்திய அளவில் 28.05 கோடியும் வெளிநாடுகளில் 21.7 கோடியும் வசூலித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 'புஷ்பா 2' திரைப்படம் தன் ஆதிக்கத்தை செலுத்தினாலும் கூட இந்த 'சூட்சும தர்ஷினி' படம் பல திரையரங்குகளில் இன்னும் வலுவாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே மலையாளத்தில் இந்த வருடத்தில் வெளியான 'பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம்' உள்ளிட்ட படங்கள் 100 கோடி தாண்டி வசூலித்தன. அந்தவகையில் சூட்சும தர்சினியும் அந்த இலக்கை எட்டுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.