துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
மலையாளத்தில் 'மாய நதி, கிங் ஆப் கொத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் 'ஜகமே தந்திரம்', விஷாலின் 'ஆக்சன்' உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படமும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரமும் இவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தற்போது கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி.
சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த 'ஹலோ மம்மி' என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஒரு மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக வாழ்க்கையில் பிரச்னையை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்ய லட்சுமி. அதே சமயம் 34 வயதான ஐஸ்வர்ய லட்சுமி இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறந்த தருணமாக விவாகரத்து அல்லது பிரேக் அப்பை பார்க்க வேண்டும். எதற்காக விவாகரத்து அல்லது பிரேக்கபை நீங்கள் நாடுகிறீர்கள்? நிச்சயமாக அது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக தான். அதை நீங்கள் தடை என்று நினைக்காமல் உங்களுடைய வளர்ச்சியின் துவக்கப் புள்ளி என்று நினையுங்கள். முந்தைய தலைமுறையில் காதலர்களுக்குள் முன்கூட்டியே செக்ஸ் என்று ஒன்று முடிந்து விட்டால் உடனடியாக அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்வார்கள்.
ஆனால் இப்போது தலைமுறை மாறி உள்ளது. யாரும் அதில் தேங்கி நிற்க தேவையில்லை. அப்படி நீங்கள் ஒரு தவறான சூழலில் சிக்கி விட்டதாக உணர்ந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவர் என்றாலும் கூட அதை விட்டு வெளியேறி விட வேண்டும்” என்று கூறியுள்ளார். இவரது துணிச்சலான இந்த கருத்துக்களுக்கு பாராட்டுகளை விட நெட்டிசன்களிடம் இருந்து கடும் விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருகிறது.