தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அதற்கு மேல் முடியாது என்கிற காரணத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். இப்போது வரை பாலிவுட்டில் இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் பரவி தான் வருகிறது.
தற்போது ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த வித்யா பாலனிடம் தீபிகா படுகோனின் இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியதாவது, "தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள் வேலை, நெகிழ்வு நேரங்களில் வேலை செய்வதற்கான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருகிறது. அவை நியாயமான உரையாடல்கள் என்று நான் கருதுகிறேன்.
குழந்தைகள் பெற்றெடுக்கும் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்களை நாம் இழக்காமல் இருக்க ஒவ்வொரு துறையும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. ஏனெனில், நான் ஒரு தாய் அல்ல. அதனால், என்னால் 12 மணிநேர படப்பிடிப்பில் பணிபுரிய முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.




