ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மகேஷ் பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு ஓடிசாவில் உள்ள கோராபுட்டில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் எம். எம். கீரவாணியுடன் இணைந்து கம்போசிங்கை தொடங்கி இருக்கிறார் ராஜமவுலி. அதேசமயம் இன்னொரு பக்கம், ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் மேன்கள் ஒரு பெரிய சண்டை காட்சிக்கான ஒத்திகை பார்த்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை தான்சானியாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. அதையடுத்து ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஆப்பிரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்.




