விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மகேஷ் பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு ஓடிசாவில் உள்ள கோராபுட்டில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் எம். எம். கீரவாணியுடன் இணைந்து கம்போசிங்கை தொடங்கி இருக்கிறார் ராஜமவுலி. அதேசமயம் இன்னொரு பக்கம், ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் மேன்கள் ஒரு பெரிய சண்டை காட்சிக்கான ஒத்திகை பார்த்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை தான்சானியாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. அதையடுத்து ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஆப்பிரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்.