'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பெரும்பாலும் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் நடிகர்களாக மாறும் வரிசையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் தனது தாத்தா வழியில் டைரக்ஷன் துறையை தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக வெளிநாட்டுக்கு எல்லாம் சென்று படித்து வந்துள்ளார். வீட்டிலேயே ஒரு ஹீரோ இருந்தாலும் கூட படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்று நினைத்த ஜேசன் சஞ்சய்க்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தது லைக்கா நிறுவனம். கடந்த ஒரு வருடமாகவே இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார் என்றும் மற்றும் தமன் இசையமைக்கிறார் என்பது உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் என்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி பெரிய ஹீரோக்களை தேடிப் போவார் என நினைத்தபோது அவர் சந்தீப் கிஷனை தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் தான். அதே சமயம் இன்று தமிழ் சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள இயக்குனர்களில் ஒருவராக, அனைத்து ஹீரோக்களாலும் விரும்பப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தான் முதலில் இயக்குனராக அறிமுகம் ஆகிய மாநகரம் படத்தில் சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து தான் படம் இயக்கினார். அந்த வகையில் தற்போது ஜேசன் சஞ்சையும் தனது முதல் படத்திற்கு சந்தீப்பை தேர்ந்தெடுத்து இருப்பதால் லோகேஷ் கனகராஜுக்கு ஒர்க் அவுட் ஆன ராசி இவருக்கும் வொர்க் அவுட் ஆகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.




