ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல் நடிகர் ஆகாமல் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட சென்னையில் தொடங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.