கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு 'சிக்மா' என்ற தலைப்பு வைத்துள்ளார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியானது.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா கதாநாயகியக நடிக்க, நடன இயக்குனர் ராஜு சுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒரு ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 60 நாட்கள் நடைபெற்றுள்ளது. இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக வேண்டி இருக்கிறதாம். அதை முடித்தபின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாக உள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
தனது மகன் ஜேசன் சஞ்சயின் முதல் பட தலைப்பு அறிவிப்பு குறித்து அவரது அப்பா விஜய் வாழ்த்துகளைத் தெரிவிப்பாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். விஜய், அவரது மனைவி, மகன், மகளை விட்டுப் பிரிந்து தனியாக இருப்பதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன இருந்தாலும் மகனின் முதல் படம் என்பதால் அவரது வாழ்த்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




