ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நேற்றுத்தான் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் இரண்டாம் பாகம் வெளியாகப் போகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினார்கள். அதன் பின் மீண்டும் 2020 நவம்பர் மாதம் ஆரம்பித்து 2021 நவம்பர் மாதத்தில் முடித்தார்கள்.
அது போல முதல் பாகம் வெளிவந்த பின்பு அடுத்த சில மாதங்களில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டுத்தான் முடித்தார்கள்.
இப்படத்திற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக இந்த இரண்டு பாகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் அல்லு அர்ஜுன். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், “புஷ்பா கடைசி நாள் கடைசி காட்சி படப்பிடிப்பு. புஷ்பாவின் ஐந்து வருடப் பயணம் முடிந்தது. என்ன ஒரு பயணம்…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.