என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கன்னட சினிமாவில் இயக்குரும், நடிகருமாக இருந்தவர் குரு பிரசாத். 2006ம் ஆண்டு 'மாதா' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா உள்பட பல படங்களை இயக்கினார். சில படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் வசித்துவந்த நிலையில், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 52 வயதான குரு பிரசாத் சமீபத்தில்தான் 2வது திருமணம் செய்தார். குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான 'ரங்கநாயகா' படம் தோல்வியைச் சந்தித்தது ஆகியவைதான் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.