ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் பெண்கள் சந்தித்து வரும் அவல நிலைகளை தோலுரித்துக் காட்டியது. இதைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமே மொத்தமாக ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை ரொம்பவே சீரியஸ் ஆனது. பல நடிகர்கள், இயக்குனர்கள் மீது சினிமாவில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி இந்த ஹேமா கமிஷன் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணமே சினிமா பெண்கள் நல அமைப்புதான்..
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அதிர்ச்சி நிகழ்வை தொடர்ந்து சினிமாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், இயக்குனர் அஞ்சலி மேனன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் சேர்ந்து துவங்கியது தான் இந்த அமைப்பு. இது கொடுத்து அழுத்தத்தினால் தான் இப்படி ஒரு விசாரணையே நடைபெற்றது மேலும் இந்த ஹேமா கமிஷன் தாங்கள் பரிந்துரை செய்துள்ள விஷயங்களை அரசு உடனடியாக திரையுலகில் அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் சமீபத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சினிமாவில் பெண்கள் இனி ஒரு சதவீதம் கூட துன்பத்தை சந்திக்கக் கூடாது.. அவர்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற விதமாக நடிகர் சங்கம் மட்டுமில்லாமல், திரையுலகில் உள்ள பல்வேறு சங்கங்களிலும் பெண்கள் சம்பந்தமாக என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்து 33 பக்கத்திற்கு ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவராக இயக்குனர் அஞ்சலி மேனன் கூறியுள்ளார்.