போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் இந்திரன்ஸ். கடந்த சில வருடங்களாகவே நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறிய இவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் கூட நடித்து வருகிறார். முன்பை விட சமீபகாலமாகவே இவருக்கு மலையாள திரை உலகில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசும்போது, சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட வழக்கில், தனது சக நடிகர் ஒருவர் (திலீப்) ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுவதையே தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியிருந்தார். அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நடிகைக்கு தானே தவிர, அதற்காக துவங்கப்பட்டதாக சொல்லப்படும் சினிமா பெண்கள் நல அமைப்பிற்காக அல்ல என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, மலையாள திரையுலகில் உள்ள சில நடிகைகள் ஒன்றிணைந்து சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றை உருவாக்கி திரையுலகில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகை வழக்கில் கூட குற்றவாளியாக கருதப்பட்டு சிறை சென்று வந்த நடிகர் திலீப் மீது தொடர்ந்து கருத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகர் இந்திரன்ஸ் அப்படிப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பு குறித்து விமர்சனம் செய்யும் விதமாக கருத்து கூறியது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்றிய ஏற்படுத்தியது.
தற்போது இதுகுறித்து நடிகர் இந்திரன்ஸ் விளக்கம் அளித்துள்ளதுடன், தான் பத்திரிக்கையில் கூறிய செய்திகள் வேறு மாதிரி வெளிப்பட்டு நான் தவறாக கூறியது போன்று ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. நான் யாரையும் நோக்கி எனது விரல்களை சுட்டிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல சினிமா பெண்கள் அமைப்பு பற்றி நான் எதுவும் தவறாகவும் கூறவில்லை. சிலர் இந்த பேட்டியில் நான் சொல்லாதவற்றை சொன்னது போன்று செய்திகளை பரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி சினிமா பெண்கள் நல அமைப்பு மீது நான் தவறாக கூறியதாக யாரேனும் நினைத்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் நடிகர் இந்திரன்ஸ்.