நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்கு திரையுலகில் புதியவர்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகள் வெளியாகும்போது அதுகுறித்து தனது மனம் திறந்த விமர்சனத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்த தயங்காதவர் நடிகர் மகேஷ்பாபு. இதன் மூலம் பல படங்கள் ரசிகர்களை எளிதாக சென்றடைந்து வெற்றியும் பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது ரைட்டர் பத்மபூஷன் என்கிற படத்தை சமீபத்தில் பார்த்த மகேஷ்பாபு. அந்தப்படம் குறித்து வியந்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன் கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ரைட்டர் பத்மபூஷன் படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். மனதைத் தொடும் ஒரு படம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அருமை. குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம். நடிகர் சுகாஷின் நடிப்பு என்னை கவர்ந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் மகேஷ்பாபு.
அறிமுக இயக்குனர் சண்முக பிரசாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சுகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக டீனா ஷில்பாராஜ் மற்றும் ரோகிணி, ஆசிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பத்மபூஷன் என்கிற இளம் எழுத்தாளரை பற்றி நகரம் விதமாக இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.