பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சின்னத்திரை நடிகரான வெற்றி வசந்த் 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அவர் நடித்து வரும் முத்து கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அவரது அடையாளமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு மக்களால் நேசிக்கப்படும் வெற்றி வசந்த், சக நடிகையான வைஷ்ணவியை காதலித்து வந்தார். இருவருக்கும் அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அடுத்த தீபாவளிக்கெல்லாம் தலை தீபாவளி கொண்டாட ஆயத்தமாகும் வெற்றி வசந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னால் மறக்க முடியாத தீபாவளி குறித்து கூறியுள்ளார்.
அதில், ''நான் எப்போதுமே என் அப்பாவுடன் தான் படம் பார்க்க செல்வேன். தனியாக செல்ல அப்பா அனுமதிக்க மாட்டார். அப்படியிருக்க கத்தி படம் ரிலீஸான தீபாவளி அன்று தான் முதன்முதலில் தனியாக படத்திற்கு செல்ல அப்பாவிடம் பயத்துடன் அனுமதி கேட்டேன். அப்பாவும் அப்போது அனுமதித்துவிட்டார். அதன்பிறகு பல முறை சினிமாவிற்கு தனியாக சென்றிருந்தாலும், கத்தி பட தீபாவளி தான் என்னால் மறக்க முடியாத தீபாவளி' என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி வசந்துக்கு தனது தந்தையின் மேல் இவ்வளவு பயபக்தியா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.