‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். இவரது கணவர் அர்னவ் இவருக்கு துரோகம் செய்துவிட்டு அன்ஷிதா என்ற சக நடிகையுடன் சுற்றி வருவதாக திவ்யா ஸ்ரீதர் புகார் செய்திருந்தார். இந்த பிரச்னை அப்படியே இருக்க அர்னவ் அன்ஷிதாவுடன் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, பின் கடந்த வாரத்தில் எவிக்ட் ஆகி வெளியேறியிருந்தார். இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த திவ்யா ஸ்ரீதர், 'சிலர் அர்னவ்வை எனது முன்னாள் கணவர் என்று சொல்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சிங்கிள் மதரா என் குழந்தைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்படுறேன். செவ்வந்தி டீம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. இப்ப நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். நான் பிக்பாஸ் போறதா சிலர் சொல்றாங்க. என்னால் என் குழந்தைகளை பிரிஞ்சு இருக்க முடியாது. அதனால நான் பிக்பாஸ் வீட்டுக்கு போகல. நீங்க எல்லாரும் எனக்கு உறுதுணையா பக்கபலமா இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. உங்க எல்லாத்துக்கும் நான் கொடுக்கிற அட்வைஸ் ஒண்ணு தான் யாரையும் நம்பாதீங்க' என அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.