அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். இவரது கணவர் அர்னவ் இவருக்கு துரோகம் செய்துவிட்டு அன்ஷிதா என்ற சக நடிகையுடன் சுற்றி வருவதாக திவ்யா ஸ்ரீதர் புகார் செய்திருந்தார். இந்த பிரச்னை அப்படியே இருக்க அர்னவ் அன்ஷிதாவுடன் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, பின் கடந்த வாரத்தில் எவிக்ட் ஆகி வெளியேறியிருந்தார். இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த திவ்யா ஸ்ரீதர், 'சிலர் அர்னவ்வை எனது முன்னாள் கணவர் என்று சொல்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சிங்கிள் மதரா என் குழந்தைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்படுறேன். செவ்வந்தி டீம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. இப்ப நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். நான் பிக்பாஸ் போறதா சிலர் சொல்றாங்க. என்னால் என் குழந்தைகளை பிரிஞ்சு இருக்க முடியாது. அதனால நான் பிக்பாஸ் வீட்டுக்கு போகல. நீங்க எல்லாரும் எனக்கு உறுதுணையா பக்கபலமா இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. உங்க எல்லாத்துக்கும் நான் கொடுக்கிற அட்வைஸ் ஒண்ணு தான் யாரையும் நம்பாதீங்க' என அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.