300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
2023ம் ஆண்டு பொங்கல் படங்களின் வெளியீட்டின் போது 'துணிவு' படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது லாரி மீதிருந்து தவறி விழுந்து ஒரு இளைஞர் இறந்து போனார். அதன் பிறகு எந்த ஒரு படத்திற்கும் தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவந்த போது கூட முதல் காட்சியாக காலை 9 மணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
அதே சமயம் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகாலை காட்சி, 6 மணி காட்சி, 8 மணி காட்சி ஆகியவை வழக்கம் போல நடைபெற்று வருகின்றன. அந்தக் காட்சிகளில் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று துடிக்கும் ரசிகர்கள் தமிழக எல்லை அருகே அமைந்துள்ள மற்ற மாநில ஊர்களில் உள்ள தியேட்டர்களில் சென்று படங்களைப் பார்க்கிறார்கள்.
இந்த மாதம் நவம்பர் 14ம் தேதி பான் இந்தியா படமாக 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக அதிகாலை காட்சிக்குக் கோரிக்கை வைத்து தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
“கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நவம்பர் 14ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் ஆரம்பாமகின்றன. தமிழகத்திலும் அதிகாலை காட்சிக்கு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அது குறித்து அப்டேட் கொடுக்கிறோம்,” தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த ஒரு படத்திற்காக தமிழக அரசு எப்படி சிறப்பு சலுகை கொடுக்கும் என்ற கேள்வியும் திரையலகத்தில் எழுந்துள்ளது. அப்படி கொடுத்தால் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மற்ற ஹீரோக்களின் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.
'துணிவு' படத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடித்து எந்த ஒரு படமும் வரவில்லை. அந்தப் படத்தின் அதிகாலை காட்சிக்காக ஏற்பட்ட ஒரு விபத்தால் நடந்த அகால மரணமே இந்த அதிகாலை காட்சிகளின் மறுப்புக்குக் காரணம் என்பதை இங்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் எல்லை மீறி நடப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு அப்படியான அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.