ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படம் வர இருக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அவரது படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தனது உடல்நிலை காரணமாக தான் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில் மலையாளத்தில் நடைபெற்ற லக்கி பாஸ்கர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துல்கர் சல்மான், தான் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி நடிப்பதால் மலையாளத்தில் ஏதோ இடைவெளி விழுந்து விட்டது போல தோன்றலாம். ஆனால் ரசிகர்கள் என்னிடம் அதே அன்புடன் தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலித்த ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். அது மட்டுமல்ல இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதையும் வென்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழுந்த தனது நண்பனை போராடி மீட்கும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக, நடித்திருந்த நடிகர் சவ்பின் சாஹிர் டைரக்சனிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
நடிகர் சவ்பின் சாஹிர் இயக்குனர் அன்வர் ரஷீத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். பின்னர் வாய்ப்பு தேடி வந்ததால் காமெடி நடிகராக மாறியவர். குறிப்பாக நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து அவரது நண்பராக பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல துல்கர் சல்மான் நடித்த பறவ என்கிற படத்தை இயக்கியதன் மூலமே இயக்குனராகவும் மாறினார். அந்த நட்பின் அடிப்படையில் மீண்டும் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்க இருக்கிறார் சவ்பின் சாஹிர்.