Advertisement

சிறப்புச்செய்திகள்

நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு

21 மே, 2025 - 10:01 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumar-files-a-case-against-a-Bollywood-actor-who-left-him-without-telling-him,-seeking-Rs-25-crore-in-damages


மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் இவரது ஆஸ்தான ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். சமீபத்தில் தான் இவர்களது கூட்டணியில் உருவான 'பூத் பங்களா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அந்த படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அக்ஷய் குமாரை வைத்து 'ஹேரா பெரி 3' என்கிற படத்தை இயக்குகிறார் பிரியதர்ஷன். கடந்த 2000ல் வெளியான 'ஹேரா பெரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2006ல் வெளியானது. தற்போது 19 வருட இடைவெளிக்கு பிறகு இதன் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது.

இந்த மூன்று பாகங்களையுமே பிரியதர்ஷன் தான் இயக்கி இருந்தார். மூன்றிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பாலிவுட் குணச்சித்திர நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த மூன்றாம் பாகத்தில் இருந்து தான் விலகுவதாக பரேஷ் ராவல் அறிவித்தார். இது படக்குழுவினரிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் இந்த படத்திலிருந்து விலகுவதற்கு சம்பள பிரச்னையோ அல்லது கதையில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துகளோ என எதுவும் காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொல்லப்போனால் அவர் தற்போது வாங்கும் சம்பளத்தை போல மும்மடங்கு இந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக பேசப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எதனால் அவர் விலகினார் என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அக்ஷய் குமார் இப்படி ஒப்பந்தத்தை மீறி நடிகர் பரேஷ் ராவல் திடீரென விலகியதால் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டு அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “பரேஷ் ராவல் இந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து என்னிடம் கூட முறையாக தெரிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் அக்ஷய் குமாரிடமாவது அவர் தெரிவித்து இருக்கலாம் அப்படி அவர் செய்யாததால் தான் அக்ஷய் குமார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இத்தனைக்கும் இந்தப்படம் துவங்கப்ப்படும்போதே பரேஷ் ராவல், சுனில் ஷெட்டி ஆகியோர் இருக்கிறார்களா என உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் என அக்ஷய் குமார் என்னிடம் கூறினார். அப்போதெல்லாம் பரேஷ் ராவல் படத்தில் இருந்து விலகும் எண்ணத்தில் இல்லை.” என்று கூறியுள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் சமீபத்தில் இதே பிரியதர்ஷன், அக்ஷய் குமார், பரேஷ் ராவல் கூட்டணியில் தான் 'பூத் பங்களா' படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அது குறித்து அக்ஷய் குமார் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி''எல்லாமே முதன்முறை... பிகினியும் ... நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே கூறட்டும்; நடிகர் சூரி நகைச்சுவை நாயகனா? கதாநாயகனா? மக்களே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in