தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிரபலங்கள் பொதுவெளியில் செல்லும்போது அல்லது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவர்களின் அனுமதி இன்றியே அவர்களுடன் செல்பி எடுக்க பல ரசிகர்கள் முயற்சிப்பது இப்போதும் தொடர்ந்து வருகிறது. சிவக்குமார், பாலகிருஷ்ணா போன்ற நட்சத்திரங்கள் கோபத்தில் ரசிகர்களின் செல்போனை தட்டிவிட்ட நிகழ்வுகள் பெருமளவில் வைரல் ஆகின.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விடுமுறைக்காக லண்டன் சென்றிருந்தபோது அங்கே தன்னை தொடர்ந்து வந்து வீடியோவில் படம் எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை பறிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து அக்ஷய் குமாருக்கு பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். சிலர் அந்த ரசிகர் செய்தது தவறு என்பது போலவும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த ரசிகரே என்ன நடந்தது என்பது குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
“லண்டனில் நான் ஆக்ஸ்போர்டு தெருவில் உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது அக்ஷய் குமாரை போலவே ஒருவர் நடந்து சென்றார். அவர் தானா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நானும் அவரை பின் தொடர்ந்தேன். அப்படியே வீடியோ எடுக்கவும் துவங்கினேன் அவருக்கு முன்னால் சென்று வீடியோ எடுத்த போது தான் அவர் உடனடியாக வேகமாக வந்து அனுமதியின்றி படம் எடுப்பது தவறு என்று கூறி என் கையைப் பிடித்தார்.
உடனே நான், அனுமதியின்றி இன்னொருவர் கையை தொடுவதும் தவறு என்று கூறினேன். அதற்கு அவர், நான் தொட்டது 'பிரண்ட்லி டச்' என்று கூறியவர், 'நான் தற்போது பிஸியாக இருக்கிறேன் நண்பா, என்னை தொந்தரவு செய்யாதே.. படம் எடுக்காதே..' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அதனால் செல்போனை அவர் பிடுங்கவும் இல்லை.. தட்டிவிடவும் இல்லை.. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரே வந்து என்னுடன் செல்பி எடுப்பதற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றார்” என்று அந்த ரசிகர் விளக்கம் கூறியுள்ளார்.




