‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குனர் கவுதம் மேனன் தனது தந்தையின் பூர்வீகமாக கேரளாவை கொண்டிருந்தாலும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தமிழ் படங்களை மட்டுமே இயக்கி வந்தார். இந்த நிலையில் முதன்முதலாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படத்தை இயக்கினார். கடந்த ஜனவரி மாதம் இந்த படம் வெளியானது. ஒரு தனியார் டிடெக்டிவ் அதிகாரியான மம்முட்டி, தன்னிடம் கிடைக்கும் ஒரு லேடீஸ் பர்ஸை உரியவரிடம் ஒப்படைக்க செல்லும்போது ஏற்படும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெள்ளியாகி மிகப்பெரிய வசூலை தராவிட்டாலும் ஓரளவு வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியதாக அறிவிப்பு வெளியானது. ஆனாலும் இப்போது வரை இந்த படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்னும் ஓடிடிக்கான விலை முடிவாகவில்லை என்றும் அதில் இழுபறி நிலவுவதால் தான் இந்த தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இறுதித்தொகை பேசி முடிக்கப்பட்டு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.