கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடைசியாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ‛சிக்கந்தர்' என்ற படத்தில் நடித்திருந்தார் சல்மான்கான். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சல்மான்கான், முருகதாஸ் இருவருமே ட்ரோல் செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அபூர்வா லக்கியா என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இப்படம் 2020ம் ஆண்டில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ‛இந்தியாவின் மோஸ்ட் பியர்லெஸ்- 3' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. வருகிற ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு லடாக் மற்றும் மும்பையில் 70 நாட்கள் நடைபெற உள்ளது. சல்மான்கான் ராணுவ அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் மூன்று இளவட்ட நடிகர்களும் நடிக்க போகிறார்கள்.