சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் ரவி நெருக்கமானார். இருவரும் பொது வெளியிலேயே ஜோடியாக வலம் வருகின்றனர். இப்படி இவர்கள் வந்த பின் ஆர்த்தி ரவி, இவரது அம்மாவும், தயாரிப்பாளருமான சுஜாதா, ரவி மோகன், கெனிஷா என ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். நேற்று கூட ஆர்த்தி, ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என கெனிஷாவை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு இன்று(மே 21) விசாரணைக்கு வந்தது. அப்போது ரவியிடமிருந்து தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.