'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தவர் பாட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சின்ன சின்ன படங்களில் பாடல்கள் எழுதி மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த கல்யாண சுந்தரத்தை பற்றி கேள்விப்பட்ட எம்ஜிஆர் அவரை நேரில் அழைத்து பாராட்டி தனக்கு ஒரு பாடல் எழுதி தருமாறு கேட்டு அதற்கான சூழலை சொன்னார். உடனே கல்யாண சுந்தரம் தானே மேஜையில் தாளம் போட்டு மெட்டமைத்து பாடிய பாடல் தான் “சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி..” என்ற பாடல்.
எந்த குறிப்பும், முன் தயாரிப்பும் இன்றி கல்யாண சுந்தரம் பாடியதை கேட்டு அசந்து போன எம்.ஜி.ஆர் அடுத்த நிமிடமே இன்னொரு சூழலை சொல்லி அதற்கொரு பாடல் கேட்டார். அந்த பாடல்தான் “திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே” இரண்டு பாடலுக்கும் எம்ஜிஆர் கொடுத்த சன்மானம் கல்யாண சுந்தரத்தின் ஒரு வருட வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது.
கல்யாண சுந்தரத்தின் பாடல்கள்தான் எம்ஜிஆரின் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பார்கள். இதை எம்ஜிஆரே ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வராக இருந்த எம்ஜிஆர் ஒருமுறை வானொலி நேர்காணலின்போது “என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” “என்று மனம் திறந்து பாராட்டினார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 65வது நினைவு நாள் இன்று.